Tuesday, March 01, 2011

முதல்பதிவு


தமிழ்த்தாய் வாழ்த்து


நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும்  அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!


                                                                             தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
                                                                               
                                                               வாழ்த்துதுமே!
                                        
                                                                 வாழ்த்துதுமே!



                                                               - மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை





      நான் சமீப காலமாக‌ சங்க இலக்கியங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றைப் பற்றிய குறிப்புகளை இணையதளத்தில் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். தொடரும் நாட்களில் சேகரிக்கப்பட்ட குறிப்புகளை ஆராய்ந்து, அதன்பின் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இச்சேகரிப்பின் முக்கிய நோக்கம் இணையதளங்களிலும், ஏனைய பிற வடிவிலும் பரவலாகச் சிதறிக் கிடக்கும் தமிழ் இலக்கியக் கட்டுரைகளை ஒருங்கிணைத்து, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆர்வமுள்ள இணையதமிழ் வாசகர்கள் பயனடையும் வகையில் இவ்வலைபக்கத்தில் பகிர்வதே!

1 comment:

  1. தமிழ்த்தாய் வாழ்த்துகளோடு ஆரம்பித்துள்ளீர்கள் ... வாழ்த்துக்கள். கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete