Friday, March 04, 2011

சங்க இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள்


     இவ்வலைப்பதிவில் எட்டுத்தொகை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள 'சங்கங்கள்' பற்றிய சான்றுகளையும், எட்டுத்தொகை நூல்களைப் பற்றியும் காணலாம்.


"தமிழ்ச்சங்கம்" பற்றிய இலக்கியச் சான்றுகள்:

மதுரையில் புலவர்கள் கூடி தமிழாய்ந்த நிலையினைப் பத்துப்பாட்டு – எட்டுத்தொகைகளில் வரும் குறிப்புகள் மூலம்  தெரிந்து கொள்ள முடிகிறது.
 
          "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
           மகிழ்நனை மருகின் மதுரை"   (சிறுபா 84 – 762)

          "தொல்லாணை நல்லாசிரியர்
          புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்"  (மதுரை 761- 762)


பொதுவாக சங்க இலக்கியப் பாடல்கள் அகம், புறம் எனும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

     அக‌ம் - அக‌ப்பொருள் பற்றியது (குடும்பம், அன்பு, காதல், தலைவன், தலைவி)

    புறம் - புறப்பொருள் ப‌ற்றிய‌து (மக்கள் வாழ்க்கை முறை, போர், வணிக‌ம், அர‌சாட்சி, நன்னெறி, புலவர்கள்)

எட்டுத்தொகை நூல்கள்:

     எட்டுத்தொகை அல்லது தொகை நூல்கள் என்பவை சங்க இலக்கியத்தில் பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேர தொகுக்கப்பட்டவை. இவற்றில் பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை.  


எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:
 
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை"

    மொத்தமுள்ள 8 நூல்களில் 5 நூல்கள் அகப்பொருள் பற்றியது, 2 நூல்கள் புறப்பொருள் பற்றியது.

   அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு. 

    புறப்பொருள் பற்றியவை: புறநானூறு, பதிற்றுப்பத்து

பரிபாடல் நூலிலுல்ள பாடல்கள் அகம், புறம் என இரண்டையும் கொண்டது.

No comments:

Post a Comment