தொடர்ச்சி....
சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300):
- தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் சங்க இலக்கியங்களாகக் கருதப்படுகிறது.
- சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.
- இவற்றுள் 30 பேர் பெண் புலவர்களாவார்கள்
- 102 பாடல்களுக்கு இயற்றியவரது பெயர் அறியப்படவில்லை
- சங்க இலக்கியங்கங்களிலிருந்து பண்டைத்தமிழரது தினசரி வாழ்க்கை நிலைமைகளையும், காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்றவற்றை அறிய முடிகிறது.
இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு இலக்கிய வடிவ நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன.
சங்க இலக்கியங்களை எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுத்தடக்கப்பட்டுள்ளன.
அச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ.வே.சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.
பதினெண்மேற்கணக்கு நூல்கள்: முறையே தொகையும், பாட்டும் இணைந்து பதினெண்மேற்கணக்கு நூல்களாகக் கூறப்படுகின்றன.
எட்டுத்தொகை நூல்கள்:
- ஐங்குறுநூறு (500 பாடல்கள், 5 புலவர்கள்)
- குறுந்தொகை (401 பாடல்கள், 205 புலவர்கள்)
- நற்றிணை (400 பாடல்கள், 175 புலவர்கள்)
- அகநானூறு (400 பாடல்கள், பலர்)
- கலித்தொகை (150 பாடல்கள், ஐவர்)
- புறநானூறு (400 பாடல்கள், பலர்)
- பதிற்றுப்பத்து (80 பாடல்கள், 10 புலவர்கள்)
- பரிபாடல் (22 புலவர்கள்)
பத்துப்பாட்டு நூல்கள்:
- திருமுருகாற்றுப்படை (நக்கீரனார்)
- பொருநராற்றுப்படை (மூடத்தாமக்கண்ணியார்)
- சிறுபாணாற்றுப்படை (நத்தத்தனார்)
- பெரும்பாணாற்றுப்படை (கடியலூர் உருத்திரங் கண்ணனார்)
- முல்லைப்பாட்டு (நப்பூதனார்)
- மதுரைக் காஞ்சி (மாங்குடி மருதனார்)
- நெடுநல்வாடை (நக்கீரனார்)
- குறிஞ்சிப் பாட்டு (கபிலர்)
- பட்டினப் பாலை (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
- மலைபடுகடாம் (பெருங் கெளசிகனார்)
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:
- திருக்குறள் (திருவள்ளுவர்)
- நாலடியார் (சமண முனிவர்கள்)
- நான்மணிக்கடிகை (விளம்பி நாகனார்)
- இனியவை நாற்பது (பூதஞ் சேந்தனார்)
- இன்னா நாற்பது (கபிலர்)
- கார் நாற்பது (மதுரைக் கண்ணங்கூத்தனார்)
- களவழி நாற்பது (பொய்கையார்)
- திணைமொழி ஐம்பது (கண்ணன்சேந்தனார்)
- திணைமாலை நூற்றைம்பது (கணிமேதாவியார்)
- ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார்)
- ஐந்திணை எழுபது (மூவாதியார்)
- திரிகடுகம் (நல்லாதனார்)
- ஆசாரக்கோவை (பெருவாயில் முள்ளியார்)
- பழமொழி நானூறு (மூன்றுறை அரையனார்)
- சிறுபஞ்சமூலம் (காரியாசான்)
- முதுமொழிக்காஞ்சி (மதுரைக் கூடலூர் கிழார்)
- ஏலாதி (கணிமேதாவியார்)
- இன்னிலை (பொய்கையார்); கைந்நிலை
(தொடரும்)
Ref:
- மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.
No comments:
Post a Comment